பாடம் 3 ஒரே தேவனா அல்லது மூன்று தேவனா?
பாடம் 3 : ஒரே தேவனா அல்லது மூன்று தேவனா ? கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே மீண்டுமாக இந்த வேத வகுப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் கடந்த பாடத்தில் வானத்திலேயும் பூமியிலேயும் யார் யாரெல்லாம் தேவர்கள் என்பதைப்பற்றியும் , தேவனுடைய குமாரனாகிய இயேசுவை வேதம் அநேக இடங்களில் தேவன் என்று ஏன் சொல்லுகிறது என்பதைப்பற்றியும் பார்த்தோம் , இப்பொழுது நாம் இயேசுவுக்கும் மேலான ஒரு தேவன் உண்டு என்பதைபற்றி பார்க்கப்போகிறோம். நாம் கடந்த பாடத்தை நினைவு கூறுவோம். அதில் இயேசுவானவரோ அல்லது தூதனோ அல்லது மோசேயோ எவர்களும் தங்களுடைய சுய வார்த்தைகளை நமக்கு போதிக்கவில்லை இவர்களுக்கு போதித்தவர் எவைகளை சொன்னாரோ அவைகளைத்தான் போதித்தார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. உதாரணமாக இயேசுவானவர் சொல்லுகையில் யோவான் 12:49. நான் சுயமாய்ப் பேசவில்லை , நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். யோவான் 12:50. அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன் ; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பித...